அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் "நன்றி நவிலும் நாள் விழா"

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலையில் உள்ள திருச்சிற்றம்பலக் கலையரங்கில் "நன்றி நவிலும் நாள் விழா" நடைபெற்றது. இதில், போசிரியல் பார்வதி வரவேற்புரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் பல்கலை உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் 2016-17 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும், சாதனைகள் குறித்தும் ஆய்வறிக்கையினை வாசித்தார். 

தொடர்ந்து, வேந்தர் ப.ரா.கிருஷ்ணகுமார் தலைமையுரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. மாணவியர்கள் தங்களது படிப்பு மற்றும் திறமைகளை வெளிக்கொணர காரணமாக இருக்கிற ஆசிரியர்களின் சேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும்' என கூறினார்.

இதையடுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் எஸ்.ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இப்பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்ததற்கு தான் பெருமை அடைகிறேன். அன்பும் மரியாதையுடன் கலந்த ஒரு கல்வியை கற்பித்து கொண்டிருக்கிற ஒரு கல்வி நிறுவனமாக அவினாசிலிங்கம் பல்கலைக் கழகம் திகழ்கிறது. மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை அறிந்து கொண்டு கல்விகற்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் செயல்பட வேண்டும். தங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொண்டால் அதன் பயன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். 

பல்வேறு அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் வளர வேண்டும். தங்களால் முடிந்த  வரை மக்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இளங்களை மற்றும் முதுகலை பயிலும் மாணவியர்கள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 250 மாணவியர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக விலங்கியல் துறை பேராசிரியர் கே.எஸ்.சாந்தி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...